எடியூரப்பா பேரம் பேசியதாக வெளியான ஆடியோ : அரசு விசாரணை குழு அமைக்க சபாநாயகர் கோரிக்கை

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மகனிடம் மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா குதிரை பேரம் பேசியதாக ஒரு ஆடியோவை முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்டார்.

Update: 2019-02-12 05:04 GMT
15 நாட்களுக்குள் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து அரசு விசாரணை நடத்த சட்டப் பேரவையில் சபாநாயகர் பரிந்துரை செய்தார். இதை முதலமைச்சர் அவையிலேயே ஏற்றுக்கொண்ட நிலையில் இதற்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது. நீதி விசாரணைக்கு  உத்தரவிட்டால் ஏற்றுக்கொள்வோம் என்றும் பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்