நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை பெறவே பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு - தம்பிதுரை
பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதால் ஏழை மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில், வாக்குகளை பெறவே, பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனால் ஏழை மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்றும் கூறினார்.