அதிமுக தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில், முதலமைச்சர் பழனிசாமி, உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்

Update: 2018-10-20 13:52 GMT
சேலத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்னையிலிருந்து விமானம் மூலம், புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன், கேரள மாநில ஆளுநர் சதாசிவமும் வந்தார். சேலத்தில் விமானத்தில் இருந்து இறங்கிய  எடப்பாடி பழனிசாமி, கேரள மாநில ஆளுனர் சதாசிவத்தை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், ஓமலூரில் உள்ள சேலம் புற நகர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு வந்த  முதலமைச்சர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து கட்சி  உறுப்பினர்களுக்கு புதிய  உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து, வேலக்கவுண்டனூர் என்ற இடத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், கும்ப மரியாதை செய்து வரவேற்று, மனுக்களையும் வழங்கினர். 
Tags:    

மேலும் செய்திகள்