"எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க தயார்" - ஸ்டாலின் திட்டவட்டம்

ஊழல் வழக்குகளில் தி.மு.க. இதுவரை தண்டனை பெற்றதில்லை என்று கூறியுள்ள ஸ்டாலின், எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் சந்திக்க தயார் என பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2018-10-18 08:35 GMT
ஊழல் வழக்குகளில் தி.மு.க. இதுவரை தண்டனை பெற்றதில்லை என்று கூறியுள்ள ஸ்டாலின், எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் சந்திக்க தயார் என பதிலடி கொடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகாரில், சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். விசாரணைக்கு உத்தரவிட்ட அன்றே முதலமைச்சர் பழனிசாமி ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க. மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளிலும்,  தண்டனை இல்லாமல்,  பொய்யான வழக்கு என நீதிமன்ற தீர்ப்பு அளித்ததால்  வெளிவந்தோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். தி.மு.க.வினர் மீது 2 ஜி வழக்கு போட்டு,  பொய் பிரச்சாரம் செய்து வந்தது என்ன ஆனது என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், அந்த வழக்கில் நீதிமன்றமே எல்லோரையும் விடுதலை செய்ததாக கூறினார். இதுவரை ஊழல் வழக்கில் திமுக.வை சேர்ந்தவர்கள் தண்டனை பெற்றது இல்லை என்றும் ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்