வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி வழங்க வேண்டும் - ஸ்டாலின்

வீரமரணம் அடைந்த ஜெகன் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவிகளை வழங்க வேண்டும் என ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-10-10 12:35 GMT
பஞ்சாப்பில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த குமரி மாவட்டம் பருத்திக்காட்டு விளையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெகன் குடும்பத்துக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.  அவரை இழந்து தவிக்கும்  குடும்பத்திற்கு உரிய நிதியுதவிகளை வழங்கி, சோகத்தின் துயரப் பிடியிலிருந்து அந்தக் குடும்பத்தை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்