கருணாநிதி பெயரில் விரைவில் புதிய அமைப்பு துவக்கிறார் மு.க. அழகிரி - ஆதரவாளர் தகவல்

கருணாநிதி பெயரில் விரைவில் புதிய அமைப்பை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி துவக்க முடிவு செய்துள்ளார்.

Update: 2018-09-13 16:33 GMT
மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். " கலைஞர் எழுச்சி பாசறை" அல்லது " கலைஞர் எழுச்சி பேரவை " என்ற பெயரில் மு.க. அழகிரி புதிய அமைப்பை துவக்க முடிவு செய்துள்ளதாகஅவரது ஆதரவாளர் இசக்கி முத்து தெரிவித்தார். கருப்பு - சிவப்பு வேட்டியை மாற்றி கட்ட முடியாது என கூறிய இசக்கி முத்து இது தேர்தலுக்கான அமைப்பாக இருக்காது என்று விளக்கம் அளித்தார். இதனிடையே, மு.க. அழகிரி, புதிய அமைப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக தனது ஆதரவாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்