"அமைச்சர், டிஜிபி தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - தங்க தமிழ்செல்வன்

குட்கா விவகாரத்தில் குற்றசாட்டுக்கு உள்ளான அமைச்சர் மற்றும் டிஜிபி, தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தினார்.

Update: 2018-09-09 19:11 GMT
மதுரை செனாய் நகரில் உள்ள அரசு பள்ளியில் நடைபெறும் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் செயல்பாட்டை கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குட்கா விவகாரத்தில் குற்றசாட்டுக்கு உள்ளான அமைச்சர் மற்றும் டிஜிபி, தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்