"அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையும் நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Update: 2018-09-02 12:25 GMT
வைகையை காப்போம், வறட்சியை விரட்டுவோம் என்ற விழிப்புணர்வு சுற்றுப்பயணத்தை, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டுள்ளார். மூல வைகை, வைகை அணை உள்ளிட்ட இடங்களை நேற்று ஆய்வு செய்த அவர், மதுரையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தை இன்று பார்வையிட்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, கழிவுகளால் வைகை ஆறு மிகவும் மாசடைந்துள்ளதாகவும், இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையும் நடத்த வேண்டும் என்றும் அன்புமணி தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்