திருப்பரங்குன்றம்,திருவாரூர் தொகுதி தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் - தினகரன்

திருப்பரங்குன்றம்,திருவாரூர் தொகுதி தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று அ.ம.மு.க. கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன் கூறினார்.

Update: 2018-08-19 14:56 GMT
வேலூர் மாவட்டம், முள்ளிப்பாளையம் மாங்காமண்டி அருகே உள்ள மைதானத்தில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுகூட்டம் நடைபெற்றது.இதில்,கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.ஏழை மக்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் பேசிய கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன்,திருப்பரங்குன்றம்,திருவாரூர் தொகுதிகளில் நிச்சயமாக வெல்வோம் என்றும்,அமமுக,அதிமுக என்று நிச்சயம் மாற்றம் பெறும் என்றும் கூறினார்.

"திருவாரூர் கருணாநிதி தொகுதி மட்டுமல்ல, இனி எனது தொகுதி"

கருணாநிதி இருந்தவரை மட்டுமே திருவாரூர் அவரது தொகுதி என்றும், இனி திருவாரூரில் அமமுக மட்டுமே வெற்றி பெறும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன்,வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளிலும், நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.மேலும், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் அமமுக வெற்றி பெறும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்