காங்கிரஸ் பிரமுகர் வெட்டி படுகொலை - மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீச்சு

புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-07-30 14:23 GMT
புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக செயல்பட்டு வந்த ஜோசப் என்பவரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். 

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கோட்டக்குப்பம் போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். எதற்காக கொலை நிகழ்த்தப்பட்டது என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்