சிறையில் இருந்தபடி ஆட்சி செய்ய அனுமதி கோரி மனு

Update: 2024-04-18 02:23 GMT

சிறையில் இருந்தபடி ஆட்சி செய்ய அனுமதி கோரி மனு

#aravindkejrival #delhi #thanthitv

டெல்லியை சேர்ந்த ஸ்ரீகாந்த் பிரசாத் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், சிறையில் இருந்தபடி காணொலி மூலம் ஆட்சி செய்வதற்கு முதல்வருக்கோ அல்லது பிரதமருக்கோ அரசமைப்பு சட்டத்தில் எவ்வித தடையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, சிறையில் இருந்தபடி காணொலி மூலம் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், அமைச்சர்களுடன் அவர் காணொலி மூலம் கலந்துரையாட உரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்