தயார் நிலையில் இருக்கும் தேர்தல் களம்.. இன்று தொடங்கும் 2ம் கட்ட வாக்குப்பதிவு

Update: 2024-04-26 02:27 GMT

13 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று

வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் காலமானதால், பெதுல் தொகுதிக்கான தேர்தல் 2-ம் கட்டத்திலிருந்து 3-ம் கட்டத்திற்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் மாறுபடும். இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரம் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 15 கோடியே 88 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4 ஆயிரத்து 553 பறக்கும் படைகள், 5 ஆயிரத்து 731 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், ஆயிரத்து 462 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்