Jewellery Theft | மகாராஷ்டிராவில் டிரேவுடன் நகைகளை திருடிக்கொண்டு ஓடிய நபர்
மகாராஷ்டிர மாநிலம் நார்போலி பகுதியில் நகைக்கடைக்கு வாடிக்கையாளர்போல வந்து ட்ரேவுடன் நகைகளை ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நகைகளை பார்த்துக் கொண்டிருந்த நபர், ட்ரே முழுக்க இருந்த நகைகளை திடீரென திருடிக்கொண்டு தப்பி ஓடினார். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் அதன் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.