பெங்களூருவில், சாலையில் நடந்து சென்றபோது காளை முட்டி தூக்கி வீசியதில், முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹுலிமங்கலா என்ற இடத்தில், ராம் ரெட்டி என்பவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வந்த காளை, திடீரென முட்டி தூக்கி வீசியதில் உயிரிழந்தார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.