முதல்முறையாக மொபைல் நெட்வொர்க்கை பெற்ற கிராமம் - பிரதமர் மோடியுடன் பேசி மகிழ்ந்த மக்கள்

Update: 2024-04-19 02:58 GMT

முதல்முறையாக மொபைல் நெட்வொர்க்கை பெற்ற கிராமம் - பிரதமர் மோடியுடன் பேசி மகிழ்ந்த மக்கள்

#pmmodi | #himachalpradesh | #india | #thanthitv

இமாச்சலப்பிரதேசத்தில் முதல்முறையாக அலைபேசி இணைப்பை பெற்ற கிராமத்தில், மக்களுடன் பேசி பிரதமர் மோடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இமாச்சலப்பிரதேச மாநிலம் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் உள்ள கியூ கிராமம், முதன்முதலாக மொபைல் நெட்வொர்க்கை பெற்றுள்ளது. இந்தியா-சீனா எல்லைக்கு அருகில் இந்த கிராமம் இருப்பதால், பல ஆண்டுகளாக மொபைல் நெட்வொர்க் கிடைக்கப் பெறாமல் இருந்த நிலையில், தற்போது இணைப்பை பெற்றுள்ளது. இதையடுத்து கியூ கிராம மக்கள், உள்ளூர்வாசிகளுடன் ஒருவருக்கொருவர் அலைபேசியில் பேசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரதமர் மோடியும் அந்த கிராம மக்களுடன் அலைபேசியில் பேசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்