சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு ! ரூ .100 கோடியை தாண்டியது வருமானம்

சபரிமலையில் மண்டல, மகரஜோதிக்கு வருகை தந்த பக்தர்கள் மூலமாக தேவசம் போர்டுக்கு 100 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

Update: 2022-01-08 13:26 GMT
சபரிமலையில் மண்டல, மகரஜோதிக்கு வருகை தந்த பக்தர்கள் மூலமாக தேவசம் போர்டுக்கு 100 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு கால பூஜைகள் தற்போது நடந்து வருகிறது. இதனால், தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 60 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், ஸ்பாட் புக்கிங்கிலும் அதிகமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் மண்டல, மற்றும்  மகரவிளக்கு காலத்தில் தேவசம்போர்டின் மொத்த வருமானம் தற்போது,100 கோடி ரூபாயை கடந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்