3000ஐ நெருங்கியது ஒமிக்ரான் பாதிப்பு
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,630-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேலையில், ஒமிக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,630-ஆக உயர்ந்துள்ளது.
இதை அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 797 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. மேலும், டெல்லி-465, ராஜஸ்தான்-236, கர்நாடகா-226 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு/குஜராத்-204, தமிழ்நாடு-121, தெலங்கானா-94, ஹரியானா-71 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம், நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றிலிருந்து இதுவரை 995 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.