மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கணவர் - கணவனைத் தேடி மனைவி, மகன் பயணம்

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கணவனை மனைவியும், மகனும் கிராமம் கிராமமாக தேடி வருகின்றனர்.

Update: 2021-11-25 19:52 GMT
மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கணவர் - கணவனைத் தேடி மனைவி, மகன் பயணம் 

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கணவனை மனைவியும், மகனும் கிராமம் கிராமமாக தேடி வருகின்றனர்.கடந்த வாரம் கொட்டித் தீர்த்த மழையால், ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள ராஜம்பேட்டை பகுதியில் உள்ள ஏரி உடைந்தது. இந்த வெள்ள நீர், ஊருக்குள் புகுந்ததால், குண்டலுரு கிராமத்தைச் சேர்ந்த வெங்கட ரெட்டி என்பவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு, அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முதல் நாள் காவல்துறையினர் தேடி கிடைக்காத நிலையில், தற்போது மழை நீர் வடிந்த நிலையில், கணவனை கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவலர்கள் கண்டுகொள்ளாததால் மனைவியும், மகனும், கிராமம் கிராமமாக சென்று தேடி வருகின்றனர். தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினரை தொடர்ந்து வலியுறுத்தியும்,அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்