இடுக்கி அணை நீர்மட்டம் உயர்வு - நீல எச்சரிக்கை விடுப்பு

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-16 02:13 GMT
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக இடுக்கி  அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் முழு கொள்ளளவு 2403 அடியாக உள்ள நிலையில் தற்போதைய நீர்மட்டம் 2390.86 அடியாக உயரந்துள்ளது. இதன்காரணமாக நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கடலோர பகுதி மக்கள் விழிப்புடன் இருக்கவும், மீனவர்கள்  கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்