திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் வழங்க மறுப்பு - போராட்டத்தில் இறங்கிய மக்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் வழங்காததால், நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-24 07:41 GMT
நாளை முதல் டோக்கன் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை முதலே அங்கு பக்தர்கள் குவிந்தனர். ஆனால் ஏற்கனவே டிக்கேட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு விட்டதாக தேவஸ்தானம் தெரிவித்ததால், மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், போலீசார் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் போராடக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதனால், திருப்பதிக்கு நேரடியாக வரும் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் வழங்க வேண்டும் எனவும், ஆன் லைனில் பதிவு செய்வது மிகவும் கடினமாக இருப்பதாகவும் பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்