ஆந்திராவிற்கு ரயில் மூலம் ரேசன் அரிசி கடத்தல் - 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையத்தில், ஆந்திராவிற்கு கடத்தப்பட இருந்த 1 டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-09-09 07:06 GMT
சென்னையில் இருந்து சூளூர்பேட்டை செல்லும் புறநகர் ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொன்னேரி வட்ட வழங்கல் துறைக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் உமாசங்கரி தலைமையிலான குழுவினர், மீஞ்சூர் ரயில் நிலையத்தில், சூளூர்பேட்டை மார்க்கமாக சென்ற ரயிலை சோதனையிட்டனர். அப்போது இருக்கைகளின் அடியில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்