கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இரண்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு

கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Update: 2021-07-31 06:02 GMT
கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வாரத்தின் இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் மக்கள் அவசியமின்றி வெளியே வர தடை விதிக்கப்படுவதுடன் மருத்துவம் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று காய்கறி, பழங்கள் மற்றும் மீன்கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், தேவையின்றி வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யும் மத்தியக் குழு நேற்றிரவு கேரளா வந்தடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்