மிகப் பிரம்மாண்டமான மீன் காட்சியகத்தை அகமதாபாத்தில் திறந்து வைக்கிறார் பிரதமர்

குஜராத் மாநிலத்தில், இந்தியாவின் மிகப்பெரிய மீன் காட்சியகத்தை காணொளி வாயிலாக பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்.

Update: 2021-07-16 06:08 GMT
குஜராத் மாநிலத்தில், இந்தியாவின் மிகப்பெரிய மீன் காட்சியகத்தை காணொளி வாயிலாக பிரதமர் இன்று திறந்து வைக்கிறார். பிரதமர் மோடி, அகமதாபாத்தில் பல முக்கிய ரயில் திட்டங்களையும், இயற்கை பூங்கா, பிரம்மாண்ட மீன் காட்சியகம் மற்றும் ரோபோடிக்ஸ் அரங்கம் உள்ளிட்டவைகளை இன்று திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் அரிய வகையான 188 கடல் உயிரினங்களை, இந்த மீன் காட்சியகத்தில் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்