4வது நாளாக நீடிக்கும் கனமழை - மும்பைக்கு ’ரெட் அலர்ட்’

மும்பையில் 4-வது நாளாக நீடிக்கும் மழை காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர்.

Update: 2021-06-12 08:01 GMT
மும்பையில் 4-வது நாளாக நீடிக்கும் மழை காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர். தென்மேற்கு பருவமழை எதிரொலியாக, மும்பையில் கனமழை நீடித்து வருகிறது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான சாலைகள், சுரங்கப்பாதைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதையடுத்து சாலைகள், சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே, அடுத்த இரு தினங்கள் மும்பை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பை,  தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய மாவட்டங்களுக்கும் 'ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்