இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - மருத்துவ உபகரணங்களை அனுப்பிய இங்கிலாந்து

கொரோனா பரவலை எதிர்கொள்ள இந்தியாவிற்கு இங்கிலாந்து அனுப்பிய மருத்துவ உபகரணங்கள் டெல்லி வந்தடைந்து உள்ளன

Update: 2021-04-27 07:50 GMT
கொரோனா பரவலை எதிர்கொள்ள இந்தியாவிற்கு இங்கிலாந்து அனுப்பிய மருத்துவ உபகரணங்கள் டெல்லி வந்தடைந்து உள்ளன. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியாவிற்கு வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைப்பதாக கூறி இருந்தார். இந்நிலையில், 100 வென்டிலேட்டர்கள், 95 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம், இன்று காலை டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தன.
Tags:    

மேலும் செய்திகள்