தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மார்ச் 9-ம் தேதி விசாரணை

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-03-06 11:34 GMT
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல். சர்மா  பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.அதில், தமிழகம் உட்பட 5 மாநிலங்களில்   சட்டப்பேரவை பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னரே தேர்தல் நடைபெற உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்பேரவை பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் பிரதமர் பொதுவானவர் என்பதால்,  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வில் மார்ச் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்