சுரங்கத்தில் மீட்பு பணி தொடர்கிறது - 30 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

உத்தரகாண்ட் மாநிலம் தபோவான் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-02-10 04:30 GMT
உத்தரகாண்ட் மாநிலம் தபோவான் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பனிப்பாறை வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தின் போது தபோவான் அணைப்பகுதியில் கட்டப்பட்டுவந்த சுரங்கத்திற்குள் சேறும், சகதியுமாக நீர் புகுந்தது. இதில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்து சிலர் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் 30 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்க 4 ஆவது நாளாக ராணுவம், மத்திய மாநில பேரிடர் மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்