"இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் 36 பேர், இலங்கை அரசிடம் பேசும் இந்திய அரசு" - வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அனுராக் தகவல்

இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 36 பேரை விடுதலை செய்வது குறித்து அந்நாட்டு அரசுடன் பேசி வருவதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-18 03:21 GMT
இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 36 பேரை விடுதலை செய்வது குறித்து அந்நாட்டு அரசுடன் பேசி வருவதாக, மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், 36 மீனவர்களையும், 5 படகுகளையும் மீட்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்