கேதர்நாத்தில் தொடங்கிய பனிப்பொழிவு - கேதர்நாத் கோயில் நடை இன்று மூடல்
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற கேதர்நாத் கோயில் நடை இன்றுடன் மூடப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற கேதர்நாத் கோயில் நடை இன்றுடன் மூடப்படுகிறது. கோயில் நடை சாத்தப்படும் சிறப்பு வழிபாட்டில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்கிறார். குளிர்காலம் தொடங்கியதை அடுத்த, கேதார்நாத் கோவில் பனியால் மூடப்படும் என்பதால் இன்று நடை சாத்தப்படுகிது. இதையடுத்து, ஆறு மாதங்களுக்கு பிறகு மே மாதம் மீண்டும் கேதர்நாத் கோயில் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது