கேரள நடிகை கடத்தல் வழக்கு - வரும் 16ம் தேதி வரை விசாரணைக்கு தடை

கேரளாவில் பிரபல நடிகை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கான தடையை, வரும் 16ஆம் தேதி வரை நீட்டித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2020-11-07 03:46 GMT
கேரளாவில் நடிகை கடத்தப்பட்டது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப்பை 8ஆவது பிரதியாக சேர்த்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீதிமன்றத்தில்  நடிகர் திலீப்புக்கு எதிராக, கடத்தப்பட்ட நடிகை அளித்த வாக்குமூலம் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை எனவும், அதில் குளறுபடி இருப்பதால் விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் எனவும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், வாக்குமூலத்தில் சாட்சிகள் கூறிய அனைத்து விஷயங்களும் பதிவு செய்யப்படவில்லை என கேரளா அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, 6ஆம் தேதி வரை கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டாம் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், நேற்று இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் வரும் 16ஆம் தேதி வரை தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்