வருகிற 17- ந் தேதி நவராத்திரி விழா துவக்கம் - கண்கவர் பொம்மைகள் விற்பனை துவக்கம்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், நவராத்திரி விழாவை முன்னிட்டு பொம்மைகளின் விற்பனை ஆரம்பித்துள்ளது.

Update: 2020-10-14 06:18 GMT
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், நவராத்திரி விழாவை முன்னிட்டு பொம்மைகளின் விற்பனை ஆரம்பித்துள்ளது. வருகிற 17 ஆம் தேதி நவராத்திரி விழா துவங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். மீரட் நகரில், சிறு வியாபாரிகள், கண்கவர் வண்ணங்களில் சிறிய அளவிலான பொம்மைகளை விற்பனை செய்து வருகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக, பெரிய பொம்மைகளை தயாரிக்கவில்லை என்றும், இதனால் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பொம்மை விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அவர்கள், வேதனை தெரிவிக்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்