இந்திய ராணுவ வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள் இல்லை - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு, உரிய பாதுகாப்பு கவசங்கள் இல்லை என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2020-10-10 10:37 GMT
இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு, உரிய பாதுகாப்பு கவசங்கள் இல்லை என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், ராணுவ வீரர்களுக்கு, குண்டு துளைக்காத டிரக்குகள், வாங்கி தர இயலாமல், பிரதமருக்கு 8 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் நவீன விமானம் வாங்கியிருப்பது நியாயமா என, அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ராணுவ வீரர்களின் வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்