கொரோனா ஊரடங்கில் ஆன்-லைன் வகுப்பு - தனியார் பள்ளி ஏழை மாணவர்களுக்கு உதவ உத்தரவு
டெல்லியில் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களும், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க தேவையான உபகரணங்களையும், இணைய சேவையையும் வழங்க அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களும், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க தேவையான உபகரணங்களையும், இணைய சேவையையும் வழங்க அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கில் பல்வேறு சூழல் காரணமாக தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகள் ஆன்-லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.