தேசிய தூய்மை மையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் - 36 மாணவர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

தூய்மை இந்தியா இயக்கத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் தேசிய தூய்மை மையத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

Update: 2020-08-08 12:47 GMT
இந்த மையங்களில் தூய்மை பற்றிய தகவல்கள், விழிப்புணர்வு, கல்வி, இதர தகவல்கள் டிஜிட்டல் முறையில் இடம் பெறுகிறது. திட்டத்தின் முக்கிய செயல்பாடுகள், நடைமுறை,  உலக அளவிலான தரங்களை கற்றுக் கொள்ளும் கல்வி மையமாகவும் இந்த மையம் செயல்பட உள்ளது.  இந்த மையத்தை தொடங்கி வைத்த பிரதமர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளாக உள்ள டெல்லியை சேர்ந்த 36 பள்ளி மாணவர்களுடன் சற்று நேரத்தில் கலந்துரையாடுகிறார்.
Tags:    

மேலும் செய்திகள்