காவல் நிலையத்தில் மது விருந்து - 3 காவலர்கள் இடை நீக்கம்

ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் 3 காவலர்கள் மது விருந்து நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Update: 2020-07-07 02:40 GMT
கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபானங்களை இந்துபூர் இரண்டாவது நகர போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து இரவு நேர பணியில் இருந்த 3 காவலர்கள் பறிமுதல் செய்யப்பட மதுபானங்களை காவல் நிலையத்திலேயே அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி ஆந்திராவில் அதிர்வலையை ஏற்படுத்தியது, இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , மது விருந்து நடத்திய 3 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்