பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வசதி - கேரள முதலமைச்சர் தகவல்

கேரளாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-30 03:06 GMT
கேரளாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில்  கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சளி,காய்ச்சல் ,சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு பரிசோதனை கட்டாயம் என்று தெரிவிததுள்ளார். மேலும், சுகாதாரம், மருத்துவமனை, வங்கி ஊழியர்களளுக்கு அறிகுறி இல்லாவிட்டாலும் பரிசோதனை கட்டாயம் என்றும் அவர் கூறியுள்ளார். 
கடந்த 24 மணிநேரத்தில் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்