ஊரடங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரவை செயலாளர் ஆலோசனை

ஊரடங்கு தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன், மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-05-10 17:57 GMT
ஊரடங்கு தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன், மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த ஆலோசனையில், தமிழகம் சார்பில், தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, கொரோனா தாக்கம், தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

மேலும் செய்திகள்