விமான டிக்கெட் ரத்து : பணம் திருப்பித்தர கோரிய வழக்கு - 2 வாரங்களில் பதிலளிக்க விமான போக்குவரத்து துறைக்கு உத்தரவு
ஊரடங்கு சமயத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட் தொகையினை முழுமையாக திருப்பி வழங்க விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீநிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
ஊரடங்கு சமயத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட் தொகையினை முழுமையாக திருப்பி வழங்க விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீநிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த மனு தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய விமான போக்குவரத்துத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.