கர்நாடகா : ரூபாய் நோட்டுக்களை சோப்பு நீரால் கழுவிய விவசாயி
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாவட்டத்தை சேர்ந்த ஒரு விவசாயி தனது நிலத்தில் விளைந்த விவசாய பொருட்களை மொத்த விற்பனை நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதற்காக வழங்கப்பட்ட பணத்தில் கொரோனா வைரஸ் இருக்குமோ என்ற பயத்தில் அவர் தான் வாங்கி வந்த ரூபாய் நோட்டுக்களை சோப்பு நீரால் கழுவி சுத்தம் செய்துள்ளார். இந்த காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.