சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் மக்கள் - லோடு வண்டிகளில் கூட்டம் கூட்டமாய் மக்கள்
உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில், கூலித்தொழிலாளிகள், ஏழை மக்கள் ஏராளமானோர் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில், கூலித்தொழிலாளிகள், ஏழை மக்கள் ஏராளமானோர் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். டெல்லியில் பிழைப்புக்காக சென்ற அவர்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்தே சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். வழியில் கிடைக்கும் லோடு வண்டிகளில், கூட்டம் கூட்டமாய் ஏறி செல்கின்றனர். உத்தரப்பிரதேசத்தில் பல இடங்களில், கொரோனா விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் தொடர்ந்து, இதுபோன்று பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.