கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மருந்து நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது.

Update: 2020-03-21 18:13 GMT
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சோதனை மையங்களை நாடு முழுவதும் மத்திய அரசு அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று தொடர்பாக ஆய்வு செய்ய தனியார் மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், இன்று மருந்து நிறுவன உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். முககவசம், கிருமி நாசினி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தி உள்ளார். விலை அதிகரிக்காமல் நாட்டு மக்களின் நலன் சார்ந்து அரசுடன் இணைந்து பணியாற்றவும் பிரதமர் அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்