இஸ்லாம் மாணவர்களிடம் கொடுக்கப்பட்ட இந்து கடவுள் படங்கள் : 2 ஆசிரியர்களுக்கு நீண்ட விடுப்பு அளித்து உத்தரவு

இஸ்லாம் மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தில் ஆசிரியர்கள் இந்து கடவுள் படங்களை வைத்து கொடுத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-02-19 01:38 GMT
கேரள மாநிலம் திருவனந்தபுரம் Azhikode அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களில் 80 சதவீதம் பேர் இஸ்லாம் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பள்ளியில் நடைபெற்ற பிரார்த்தனையின் போது பாடப்புத்தகத்தில் ஐயப்பன், சரஸ்வதி ஆகிய இந்து கடவுள் படங்களும் ஓம் வடிவ குறியீடும் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம் 2 ஆசிரியர்களுக்கு நீண்ட விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பதட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித்துறையும் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்