குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கையெழுத்து : முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், தூதர்கள் உள்ளிட்ட 154 பேர் கையெழுத்து

குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி.-க்கு ஆதரவு தெரிவித்து, டெல்லியில் 154 முக்கிய நபர்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

Update: 2020-02-17 17:57 GMT
குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி.-க்கு ஆதரவு தெரிவித்து, டெல்லியில் 154 முக்கிய நபர்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். முன்னாள் நீதிபதிகள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் தூதர்கள் உள்ளிட்ட 154 பேர், தங்கள் ஆதரவை கடிதத்தில் தெரிவித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் இந்திய குடிமக்களுக்கு பொருந்தாது என்றும், அது இந்திய அரசியலைப்பு சட்டத்தின் 15ஆவது பிரிவுக்கு எதிரானது அல்ல எனவும், அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்