ஜி.எஸ்.டி பவனில் பயங்கர தீ விபத்து - ஏராளமான ஆவணங்கள் எரிந்து நாசம்

மும்பை, பைகுல்லா பகுதியில் அமைந்துள்ள ஜிஎஸ்டி பவனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான ஆவணங்கள் எரிந்து நாசமாகின.

Update: 2020-02-17 12:46 GMT
மும்பை, பைகுல்லா பகுதியில் அமைந்துள்ள ஜிஎஸ்டி பவனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான ஆவணங்கள் எரிந்து நாசமாகின. பைகுல்லா பகுதியில்,  மகாராணா பிரதாப் சவுக் எனும் இடத்தில் ஜி.எஸ்.டி பவன் செயல்பட்டு வருகிறது. ஒன்பது தளங்கள் கொண்ட இந்தக் கட்டடத்தில் 8 வது தளத்தில் எதிர்பாராதவிதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, 9வது தளத்திற்கும் தீ பரவியது. தகவறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  கட்டிடத்தில் சிக்கியவர்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இந்த தீ விபத்தினால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்