"3 தலைநகரங்களை அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்" - இன்று கூடுகிறது ஆந்திரா சட்டமன்றம்

ஆந்திர மாநில சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று கூட உள்ள நிலையில் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2020-01-20 03:43 GMT
ஆந்திர மாநில சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று கூட உள்ள நிலையில் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த மாநிலத்திற்கு  3 தலைநகரங்களை அமைக்க உள்ளதாகவும், விசாப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும், அமராவதி சட்டமன்ற தலைநகராகவும், கர்னூல் நீதிமன்ற தலைநகராக அமைக்க உள்ளதாக ஏற்கனவே ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். இது  தொடர்பாக இன்றைய கூட்டத்தொடரில் முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்ற உள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால், சட்டப்பேரவை வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்