ஒடிசா : 41-வது கலாச்சார நடன திருவிழா - பாரம்பரிய நடனமாடிய கலைஞர்கள்

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில், பார்ஷா என்றழைக்கப்படும் 41-வது கலாச்சார விழா கோலாகலமாக தொடங்கியது.

Update: 2019-08-30 05:39 GMT
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில், பார்ஷா என்றழைக்கப்படும் 41-வது கலாச்சார விழா கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 3 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது. ஒடிசாவின் நடனம் மற்றும் இசையை தேசிய மற்றும் சர்வதேச அளவில் மேம்படுத்துவதற்காக, இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மழை வெள்ள பாதிப்பு, சுதந்திரப் போர் உள்ளிட்டவையை கருப்பொருளாக வைத்து, கலைஞர்கள் நடனமாடினார்கள். பார்வையாளர்கள் மெய் மறந்த கலாச்சார விழாவை பார்த்து ரசித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்