மகான் அரவிந்தரின் 147-வது பிறந்தநாள் விழா - வெளிநாட்டு பக்தர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு

மகான் அரவிந்தரின் 147-வது பிறந்த நாள் விழா புதுச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Update: 2019-08-15 10:56 GMT
மகான் அரவிந்தரின் 147-வது பிறந்த நாள் விழா, புதுச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அரவிந்த ஆசிரமத்தில் அதிகாலை நடைபெற்ற கூட்டு தியானத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும், அரவிந்தர், அன்னை ஆகியோர் பயன்படுத்திய அறைகள் மற்றும் பொருட்கள் பக்தர்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டன. இதனை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்