இரும்பு ஆணிகள், சாவிகள் விழுங்கிய நபர் : மனநலம் பாதிக்கப்பட்டவரின் செயலால் மருத்துவர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தானில் வயிற்று வலி காரணமாக ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரின் வயிற்றிலிருந்து , இரும்பு ஆணிகள், சாவிகள், காசுகள் உள்ளிட்ட பொருட்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

Update: 2019-06-18 06:04 GMT
ராஜஸ்தானில் வயிற்று வலி காரணமாக ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரின் வயிற்றிலிருந்து , இரும்பு ஆணிகள், சாவிகள், காசுகள் உள்ளிட்ட பொருட்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். 40 வயதான அந்த நபரின் வயிற்றை எக்ஸ் ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு ஒன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 800 கிராம் எடை கொண்ட 80 வகையான பொருட்கள் அகற்றப்பட்டன. மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர், ஆபத்தான இப்பொருட்களை விழுங்கி இருப்பது உரிய நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டு அகற்றப்பட்டதால் அவர் உயிர் பிழைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்