8 சதவீதம் குறைந்த மறுவாக்குப்பதிவு : வெயில் வாட்டுவதால் வாக்களிக்க மக்கள் சுணக்கம்

புதுச்சேரி, வெங்கட்டா நகர் வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 55 புள்ளி 36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Update: 2019-05-13 02:18 GMT
புதுச்சேரி, வெங்கட்டா நகர் வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 55 புள்ளி 36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 10 ஆம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதனையடுத்து நேற்று நடைபெற்ற மறு வாக்குப்பதிவில் 55 புள்ளி 36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகளைவிட இது 8 சதவீதம் குறைவானதாகும். கடும் வெயில் நேரத்தில் மறு  வாக்குப்பதிவுக்கான வந்த மக்களுக்கு தேர்தல் அலுவலர்கள் சார்பாக மோர் வழங்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்