ரூ.50 லட்சம் பணத்தை போலீசார் வாங்கிச் சென்றதாக நாடகம் - நகைக்கடை ஊழியர் உள்ளிட்ட 2 பேர் கைது

ஆந்திர மாநிலம் நெல்லூரில், ஐம்பது லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் வாங்கிச் சென்றதாக நாடகமாடிய நகைக்கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-27 12:43 GMT
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த மல்லிகார்ஜுனா என்பவர், நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், தனது கடையில் வேலை பார்த்து வந்த அனிதா என்பவரிடம் 50 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து சென்னையில் இருந்து நகை வாங்கிக்கொண்டு வருமாறு கூறியுள்ளார்.இதனையடுத்து ரயிலில் சென்னை சென்ற அனிதாவிடம் இருந்த பணத்தை, போலீசார் எனக்கூறி 2 பேர் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து  மல்லிகார்ஜுனா அளித்த புகாரின் பேரில் போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் பணத்தை வாங்கிச்சென்றது அனிதாவின் நண்பர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து அனிதா உள்ளிட்ட 2 பேரை கைது செய்த போலீசார், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்